ஜும்ஆ ஒலிப்பதிவு – மீரா ஜும்ஆப் பள்ளிவாயல் (23.01.2015)

ஒலிப்பதிவு – M.N. அஹமட் ஆஸிர்

பயான் நிகழ்த்தியவர் – மௌலவி அஷ் ஷெய்க் ஏ.எம். ஹாரூன் (ரஷாதி) (அதிபர், சபீலுர் ரஷாத் அரபுக் கல்லூரி காத்தான்குடி)

தலைப்பு – பாவங்களும் அதன் தீய விளைவுகளும்

இடம் –  மீரா ஜும்ஆப் பள்ளிவாயல், காத்தான்குடி – 01

காலம் – 23.01.2015

முஹர்ரம் மாதத்தின் சிறப்பும் ஆஷுறா நோன்பும்

– முனாப் நுபார்தீன் –
இப்புவியில் வாழும் அனைத்து இனத்தினர்களும் மதத்தினர்களும் தங்களுக்கென்று வேறுபட்ட சில வருடப் பிறப்புக்களைக் கொண்டாடி வருவதனைப் பார்கின்றோம். அந்த வகையில் ஆங்கில வருடப் பிறப்பு, தமிழ் வருடப் பிறப்பு, சிங்கள வருடப் பிறப்பு என்ற வழக்கம் நடைமுறையில் இருப்பதனை எம்மால் காண முடிகின்றது. உலகில் பொதுவாக சூரிய சுழற்சியைக் கொண்டு கணிக்கப்பட்டுள்ள நாட்காட்டியே பயன்பாட்டில் இருந்த போதும் அனைத்தினத்தினர்களும் சந்திரனைக் கொண்டு கணிக்கப்பட்டுள்ள நாட்காட்டியின் அடிப்படையிலேயே தங்களது வருடப் பிறப்பினைக் கொண்டாடுகின்றனர்.

அந்த வகையில் நமது வருடப்பிறப்பாக ஹிஜ்ரி வருடம் காணப்படுகின்றது. இன்ஷா அல்லாஹ் இவ்வாண்டு அல்லாஹ்வின் அருளால் எமது வருடப்பிறப்பாகிய நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவில் குடியேறிய நிகழ்ச்சி (ஹிஜ்ரத்) நடந்தேறி   1435 சந்திர வருடங்களைக் கடந்து எதிர் வருகின்ற 25-10-2014 ம் கிருஸ்த்து வருடம் சனிக்கிழமைன்று ஹிஜ்ரி 1436 ல் நுழைய இருக்கின்றது.

முஹர்ரம் என்பது ஹிஜ்ரி வருடத்தின்; முதல் மாதம் ஆகும். முஹர்ரம் என்பதற்குப் புனிதமானது – புனிதமிக்கது அல்லது தடுக்கப்பட்டது என்பது பொருளாகும்.

வல்ல அல்லாஹ் மனிதர்களாகிய நாம் தீமைகளிலிருந்து தவிர்த்து அதிகமான நன்மைகளில் நம்மை ஈடுபடுத்தும் வகையில் குறிப்பிட்ட சில இடங்கள் காலங்கள் ஆகியறவற்றை புனிதம் வாய்ந்ததாகவும் அந்த இடங்களிலும் காலங்களிலும் தீமைகள் புரிவதைத் தடுக்கப்படதாகவும் ஆக்கி இருக்கின்றான்.

அவ்வாறு புனிதம் வாய்ந்த தீமைகள் தடுக்கப்பட்ட மாதங்களில் முஹர்ரம் மாதம் முதன்மையானதாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் : நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் – அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை இது தான் நேரான மார்க்கமாகும் – ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணை வைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (அல்-குர்ஆன்: 9:36)

மேற்படி வசனத்தில் கூறப்பட்டுள்ள புனிதமான மாதங்கள் என்பது முறையே
1.    முஹர்ரம்
2.    துல்-கஃதா
3.    துல்-ஹஜ்
4.    ரஜப்

ஆகிய நான்கு மாதங்களாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒரு வருடம் பன்னிரண்டு மாதங்களைக் கொண்டதாகும். அவற்றுள் நான்கு மாதங்கள் புனிதமானவையாகும் அவற்றுள் மூன்று மாதங்கள் தொடராக வரக்கூடிய துல்-கஃதா துல்-ஹஜ் மற்றும் முஹர்ரம் அத்துடன் ஜமாதில் ஆகிர் ஷஃபான் ஆகியவற்றுக்கிடையில் வரக்கூடிய ரஜபுல் முழர் எனும் மாதமுமாகும்.(நூல் : புகாரி)

நாம் மேலே குறிப்பிட்ட அல்-குர்ஆனின் 9:36 வசனத்தின்படி நாம் இந்த மாதங்களில் எவருடனும் போர் புரிதல் கூடாது. அதே சமயம் நமது விரோதிகள் நம்முடன் வலிய சண்டைக்கு வந்தால் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளப் போரிடலாம் என்பதை அறிகிறோம். இதன் மூலம் மனித சமுதாயத்தில் சண்டைச் சச்சரவற்ற ஒரு அமைதியான நிலையை உருவாக்குதல் முஸ்லிம்களின் கடமையாகிறது. இது அல்லாஹ் தனது திருமறை குர்ஆன் மூலம் நமக்கிடும் கட்டளையாகும். இக் கட்டளையை சரிவர நிறைவேற்றுவோம் என உறுதி பூண்டவர்களாக ஹிஜ்ரி வருடத்தை வரவேற்க வேண்டும். இதுவே திருக்குர்ஆன் முஸ்லிம்களிடையே எதிர்பார்க்கும் விசேட செயலாகும்.

அத்துடன் இவ்வாறு புனிதத்தன்மை வாய்ந்த இடங்களிலும் காலங்களிலும் தீமை செய்வதென்பது ஏனைய இடங்களிலும் காலங்களிலும் செய்யப்படும் தீமைகளை விட மிகக் கடுமையானதாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்: நிச்சயமாக எவர் நிராகரித்துக் கொண்டும் உள்ளூர்வாசிகளும் வெளியூர்வாசிகளும் சமமாக இருக்கும் நிலையில் (முழு) மனித சமுதாயத்திற்கும் எதனை (புனிதத்தலமாக) நாம் ஆக்கியிருக்கிறோமோ அந்த மஸ்ஜிதுல் ஹராமை விட்டும்ää மேலும் அல்லாஹ்வுடைய பாதையை விட்டும்ää தடுத்துக் கொண்டும் இருந்தார்களோ அவர்களுக்கும் மேலும் யார் அதிலே (மஸ்ஜிதுல் ஹராமில்) அநியாயம் செய்வதன் மூலம் வரம்பு மீற விரும்புகிறானோ அவனுக்கும் நோவினை தரும் வேதனையிலிருந்து சுவைக்கும்படி நாம் செய்வோம்.(அல்-குர்ஆன் : 22:25)

இந்த மாதத்தில் முடிந்த அளவு அதிகமாக நோன்பு நோற்றல் வரவேற்க்கத்தக்கதாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ரமளானுக்குப் பின் நோன்புகளில் மிகவும் சிறப்பான நோன்பு – அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும். பர்ழான (கடமையான) தொழுகைக்குப் பின் மிக்க சிறப்பான தொழுகை இரவுத் தொழுகையாகும். ( நூல் : முஸ்லிம்ää அஹ்மது.)

ஆஷுறா நோன்பு :

இந்த மாதத்தில் 10 நாளன்று நோன்பு நோற்றல் சுன்னத் நபிவழியாகும்.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது யூதர்கள் ஆஷுறா (பத்தாம்) தினத்தன்று நோன்பு நோற்பதைக் கண்டார்கள். அவர்களை நோக்கி நபி (ஸல்) அவர்கள்ää நீங்கள் நோன்பு நோற்கும் இந்நாளின் சிறப்பு என்ன? என்று கேட்டார்கள்.

அதற்கு யூதர்கள் : இது ஒரு புனிதமான நாள். இன்று தான் மூஸா (அலை) அவர்களையும், அவரது சமூகத்தினரையும் (அவர்களது) விரோதிகளான ஃபிர்அவ்ன் மற்றும்அவனது கூட்டத்தினரிடமிருந்து காப்பாற்றி, அவனையும் அவனது கூட்டத்தினரையும் நீரில் மூழ்கடித்தான். அதற்கு நன்றி செலுத்தும் விதமாக நாங்கள் நோன்பு வைக்கிறோம் என்று கூறினார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் மூஸா (அலை) அவர்களின் விசயத்தில் உங்களை விட நானே அதிகம் உரிமையும், தகுதியும் உடையவன் எனக் கூறி விட்டுத் தாமும் நோன்பு நோற்று, பிறரையும் நோன்பு நோற்கும்படி ஏவினார்கள். (நூல்; : புகாரி, முஸ்லிம், அஹ்மத்)

இந்த நோன்பு கடந்த ஒரு வருடத்திற்குரிய பாவத்திற்கான பரிகாரமாகும்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆஷுறா தினத்தன்று நோற்கப்படும் ஒரு நோன்பானது அல்லாஹ் அதை கடந்த ஒரு வருடத்தின் பாவங்களுக்குப் பரிகாரமாக்கி விடுவான். (நூல்: திர்மிதி)

இந்த நபிமொழி மூலம் முஹர்ரம் ஆஷுறா (பத்தாம்) தினத்தன்று நோன்பு நோற்பது கட்டாயக் கடமை போலத் தெரியலாம். ஆனால் இது கட்டாயக் கடமையல்ல. காரணம் நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த ஆரம்பத்தில் – ரமழானின் கட்டாய (பர்ளான) நோன்பு கடமையாக்கப்படாத போது – நிகந்த நிகழ்ச்சியாகும் இது. ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின்பு இந்த ஆஷுறா நோன்பைக் கட்டாயம் நோற்க வேண்டுமென ரசூல் (ஸல்) அவர்கள் வலியுறுத்தவில்லை. இதனைக் கீழ்க்காணும் நபி மொழி தெளிவுபடுத்துவதைக் காணலாம்.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது ஆஷுறா தினத்தின் நோன்பு நோற்கக் கட்டளையிட்டிருந்தார்கள். ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்டபின்ää விரும்பியவர்கள் ஆஷுறா தினத்தில் நோன்பு நோற்கட்டும். விரும்பியவர்கள் விட்டு விடட்டும் எனக் கூறினார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம், முஸ்னத்-அஹ்மத்.)

யூதர்களுக்கு மாறு செய்தல்.

அன்றய நாளில் யூதர்களும் நோன்பு வைப்பதனால் அவர்களுக்கு மாறு செய்யும் வகையில் 10ம் தினத்திற்கு முன்னால் 9ம் தினத்தையும் அல்லது 11ம் தினத்தையும் இணைத்து இரண்டு நோன்புகள் வைத்தல் வேண்டும்.

ஆஷுறா (பத்தாம்) தினத்தை யூதர்கள் கண்ணியப்படுத்தி நோன்பு நோற்கின்றனர் என நபி (ஸல்) அவர்களிடம் சில நபித்தோழர்கள் கூறிய போதுää அடுத்த ஆண்டு நான் உயிரோடிருந்தால் (யூதர்களுகு;கு மாற்றமாக) ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் என நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். ஆனால் மறுவருடன் இந்த தினத்திற்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் மரணமடைந்து விட்டார்கள். (நூல் : முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத்)

இந்த நபிமொழியின் மூலம் நாம் முஹர்ரம் மாதம் 9ம்10ம் நாட்களில் நோன்பு நோற்பது நபி வழி (சுன்னத்) என்பதை அறியலாம். அவ்வாறு 9ம் 10ம் தினங்களில் நோன்பு வைக்கத்தவறின் யூதர்களுக்கு மாறு செய்யும் வகையில் 10ம் 11ம் தினங்களில் வைக்கலாம்.

வஹ்ததுல் வுஜுத்: ஓர் ஆய்வு

தலைப்பு: வஹ்ததுல் வுஜுத் ஓர் ஆய்வு – அத்வைதக் கொள்கை மற்றும் அதன் தோற்றமும் வளர்ச்சியும்

உரை: Dr. ULA.  அஷ்ரப் PhD

ஜும்ஆ: மரணத்தை எதிர்பார்த்த முஃமினின் வாழ்வு

தலைப்பு: மரணத்தை எதிர்பார்த்த முஃமினின் வாழ்வு

திகதி: 10-10-2014 வெள்ளிக்கிழமை

ஜும்ஆ உரை: மௌலவி அஸ்ஹர் ஸீலானி

காத்தான்குடியில் செரெண்டிப் TV

Serendib TVநமது சமுதாயத்திற்கு மிகவும் அவசியமான தனியான ஒரு ஊடகம் நாளாந்தம் நடைபெறும் நிகழ்வுகளை துல்லியமாக எடுத்துக்காட்டுவதற்கும், அவ்வப்போது தேவையான வழிகாட்டல்களை வழங்குவதற்கும் தேவை என்று உணர்ந்து இது வரை எத்துனையோ முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் அது இதுவரை பூரணமாக கை கூடாத நிலையிலேயே நாம் இருக்கின்றோம்.

இருக்கின்ற இரண்டு வாராந்த பத்திரிகைகளையும் தினசரி பத்திரிக்கையாக மாற்ற எத்துனை பிரயத்தனம் எடுத்தாலும் அதுகூட இன்று வரை சாத்தியம் இல்லாமல் போய் இருக்கின்றது.

அதே நேரம் சமூக வலையமைப்புக்கள் ஓரளவு அந்த குறையை நிவர்த்தி செய்தாலும் சில நேரங்களில் நம்பகத்தன்மை குறித்த சந்தேகம் மக்களிடம் இருப்பதும் நாம் அறிந்ததே.

தற்போது ASK மீடியா நெட்வொர்க் நிறுவனத்தின் உதவியூடாக அவர்களது வலையமைப்பில் சிறிய பிரிவாக இருந்த செரெண்டிப் தொலைக்காட்சி சேவையை நமது ஊரில் இருந்து பாரிய முற்போக்கு நோக்கோடு முற்று முழுதாக இஸ்லாமிய விழுமியங்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத வகையிலும், இனம்களுக்கு இடையில் குழப்பத்தை ஏற்படுத்தாத வகையிலும், ஒரே சமூகத்திற்கிடையில் பல பிரிவு களையும் குழப்பம்களையும் ஏற்படுத்தாத ஒரு நடுநிலையான சுதந்திரமான, அதே நேரம் சகல அரசியல் அமைப்புக்களையும், தலைமைகளையும், அணைத்து செயல்படக்கூடிய ஒரு திறன் மிக்க ஒளிபரப்பாக இதை நடத்தவேண்டும் என்று நிருவாகம் உறுதியுடனும், ஆர்வத்துடனும் நமது ஊரில் களத்தில் இறங்கியுள்ளது.

இந்த சேவைக்கு நமது சமூகம் தன்னாலான பக்களிப்பை பூரணமாக வழங்கி தேவையான ஆலோசனைகளையும் ஆதரவையும் தனிப்பட்ட முறையிலும், பொது நல அமைப்புகள் மூலமும் வழங்குவது மேலும் மக்கள் மயப்பட்ட ஒரு சேவையாக இதை வளர்க பெரிதும் உதிவியாக இருக்கும் என்று நிருவாகம் மிகவும் உறுதியாக நம்புகிறது

இதன் முதல் கட்டமாக அறிமுக வைபவம் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் புதன்கிழமை (08.10.2014) மாலை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து ஹிஸ்புல்லாஹ் கலாச்சார மண்டபத்தில் நடைபெற வேண்டிய ஆயுத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்வில் மூத்த உலமாக்கள் அரசியல் தலைமைகள், படித்தவர்கள்,புத்திஜீவிகள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பிகவுள்ளது மிக முக்கிய அம்சமாகும்.

ASK Media Network என்பது கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலாக தனது சேவையை ஐரோப்பாவில் செய்மதி ஊடாகவும் இணையத்தளத்தின் மூலமாகவும் நடத்திவருகிறார்கள். என்பதும் கடந்த 5 வருடங்களாக யாழ்ப்பாணத்திலும்  சிறப்பாக நடத்தி வருகின்றார்கள்.

இவர்களின் தலைமைக்காரியாலயம் கொழும்பில் BMICH இல் இயங்கிவருகிறது தமிழ் சகோதரர்களான இவர்கள் முற்று முழுதான ஒரு முஸ்லிம் பிரிவையும் இணைத்து 24 மணிநேர சேவையாக நடத்த முன் வந்தது இரு சமூகங்களுக்கு இடையிலும் நல்லுறவை ஏற்படுத்த வேண்டும் என்பதும், இதற்குப்பின்னர் முஸ்லிம் பிரிவில் நடைபெறும் அணைத்து நிகழ்வுகளும் இஸ்லாமிய விளுமியங்களுக்கு அப்பால் சென்று விடாது கட்டுப்படுத்துவதை உறுதிப்படுத்தும் பொறுப்பை முஸ்லிம் உலமாக்களின் பொறுப்பில் தந்துள்ளார்கள் என்பது விசேட அம்சமாகும்.

நமது ஊரில் நடைபெறும் இந்த நிகழ்வு பெருநாள் காலத்தில் வருவதால் முழுநேர மகிழ்ச்சிதரும் ஒரு கலை கலாச்சார நிகழ்வாகவும் அமைய இருப்பதோடு அன்றைய சகல நிகழ்வுகளும் சர்வதேச வலை அமைப்பின் ஊடாகவும் செய்மதி ஊடாகவும் உலகம் முழுவதும் காணக்கூடிய வகையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட இருப்பதும் முக்கிய அம்சமாகும். தற்போது இந்த ஒளிபரப்பு இணைப்பை வடக்கில் சுமார் இரண்டு லட்சத்திற்கு மேல் பெற்று இருக்கின்றார்கள்! எதிர்காலத்தில் நமது நாட்டில் இருந்து செய்மதி ஊடாக இயக்குவதற்கான பலமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வுகளில் அனைவரும் கலந்து சிறப்பிற்குமாறு மிகவும் அன்பாக அழைக்கின்றோம்.

சவூதியில் இறந்த கல்முனைப் பெண்ணின் குடும்பத்தாருக்கு நஷ்ட ஈடு

soudi arabசவூதி அரேபியாவில் 2013 ஆம் ஆண்டு  இறந்த கல்முனைப் பிரதேச பெண்ணுக்கான நஷ்ட ஈடு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

[Read more…]

ஸஹர் முடிவும் நோன்பின் நிய்யத்தும்

dua-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் – ஆசிரியர், சத்தியக் குரல்-

தீன் என்பது அல்லாஹ்வுடைய கட்டளை. நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறையாகும். அதாவது அல்லாஹ்வுடைய கட்டளை என்றால் குர்ஆன், நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறை என்றால் ஹதீஸ் ஆகும். குர்ஆனும் ஹதீ ஸும்தான் நமது வழிகாட்டிகள் என்பதை உலக மக்கள் ஏற்று அமல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

எந்த அமலாக இருப்பினும், அது நபி (ஸல்) அவர்கள் நமக்குக் காட்டித் தந்ததாக இருக்க வேண்டும். நாமாக அமல்களைச் செய்யக் கூடிய நிலையை உருவாக்கிக் கொள்ளக் கூடாது. அந்த அடிப்படையில் ஸஹர் முடிவு என்று இன்று எல்லாப் பள்ளி களிலும் நோன்புதான் அட்டவணையிலும் போடப்பட்டுள்ளதைக் காணலாம். இது சரியா? அல்லது பிழையா? என்பதைத் தெளிவுபடுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். [Read more…]

விட்டுக் கொடுப்பு: அஷ்ஷைய்க் பின்பாஸ் (ரஹ்) அவர்களின் ஃபத்வா

Dua-e-Qunootதமிழில் மொழிப்பெயர்க்கப்ட்ட அஷ்ஷைய்க் பின்பாஸ்(ரஹ்) அவர்களின் ஃபத்வா

கேள்வி:
நமக்குள் ஒன்றுபட்ட விடயங்களில் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வோம். முரண்பட்ட விடயங்களில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வோம்! என்ற இமாம் ஹஸனுல்பன்னா (ரஹ்) அவர்களது கூற்று சரியானதுதானா?

பதில்:
அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! அவனது தூதர் மீதும் அவரது தோழர்கள் மீதும் அல்லாஹ்வின் ஸலவாத்தும் ஸலாமும் உண்டாவதாக!

[Read more…]

இலங்கையில் பாதிக்கப்பட்ட நமது உறவுகளுக்காக……..

மனைவியை மகிழ்விப்பது எப்படி?

muslim-husband-wife(தமிழில்: Mufti – இஸ்லாம்கல்வி.கொம்)

(குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில், ஒவ்வோர் ஆணும் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டியவை)

அழகிய முகமன்

  • வேலையிலிருந்தோ, வெளியூர் பயணத்திலிருந்தோ அல்லது எங்கிருந்து வீட்டுக்கு வந்தாலும் நல்ல வாழ்த்துக்களைத் தெரிவித்தவாறு வீட்டில் நுழையுங்கள்.
  • மலர்ந்த முகத்துடன் ஸலாம் சொன்னவாறு மனைவியைச் சந்தியுங்கள். ஸலாம் சொல்வது நபிமொழி மட்டுமல்லாது உங்கள் மனைவிக்கு நீங்கள் செய்யும் பிரார்த்தனையும்கூட.அவளுடைய கைகளைப் பற்றி குலுக்கி ‘முஸாபஹா’ செய்யலாம்.

[Read more…]

சதி வழி சென்றேன், நல்வழி கண்டேன்

– ஆங்கிலத்தில்: அரப் நியூஸ் / தமிழில்: அவ்பர் முஸ்தபாShariffa Carlo

……..மேலும் திட்டம் தீட்டுவதில் அல்லாஹ் மிகச்சிறந்தவன் ஆவான்.

**கலைச் சொற்கள்:

யுனிட்டேரியன்:

இயேசு (ஈஸா (அலை)) அவர்கள், இறைவனின் தூதுவர் மட்டுமே எனவும், தெய்வீகத்தன்மை இல்லை எனவும் நம்பும் கிறிஸ்தவர்களின் ஒரு பிரிவு. மேலும்,

[Read more…]

ஜாமிஉழ் ழாபிரின்-குத்பா பிரசங்க ஒலிப்பதிவு

Jamiyullafirin Repair 3ஒலிப்பதிவு: AM. சாதிகீன்

இடம்: காத்தான்குடி,05  ஜாமிஉழ் ழாபிரின் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல்

குத்பா உரை: மௌலவி SAM. அனஸ் (ரஷாதி)

தலைப்பு: அநீதி இழைப்பதை விட்டொழிப்போம்.

[Read more…]

நோன்பின் சட்டங்கள்

dua-A.J.M மக்தூம்-

1.      நோன்பு கடமையாவதற்குரிய நிபந்தனைகள்

1)     முஸ்லிமாக இருத்தல், 2) பகுத்தரிவுள்ளவனாக இருத்தல், 3) பருவமடைந்திருத்தல், 4) பிரயாணத்தில் இல்லாதிருத்தல், 5) நோன்பு நோற்க சக்தி பெற்றிருத்தல், 6) மாதவிடாய், பிரசவ இரத்தப் போக்கு போன்றவற்றிலிருந்து நீங்கியிருத்தல்.

2.      நோன்பின் கடமைகள்

[Read more…]

காத்தான்குடியில் மகளிருக்கான ஆன்மீக உளவளத்துணை வழிகாட்டல் நிகழ்ச்சி

image001– எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் –

காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் தஃவா வழிகாட்டல் மற்றும் கல்வி பிரிவுகளின் ஏற்பாட்டில் மகளிருக்கான ரமழான் மாதத்திற்கான ஆன்மீக உளவளத்துணை வழிகாட்டல் நிகழ்ச்சி இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.00மணி தொடக்கம் 6.00மணிவரை இஸ்லாமிய வழிகாட்டல் நிலைய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் தலைவரும் தென்கிழக்கு பல்கலைக்கழக அறபு இஸ்லாமிய கற்கைகளின் பீடாதிபதியுமான அஷ்ஷெய்க் ஏ.எம்.அலியார் றியாதி MA அவர்களால் ரமழான் மாதத்திற்காக தயாராகுவோம் எனும் தலைப்பில் விஷேட அன்மீக வழிகாட்டல் நிகழ்ச்சியும் [Read more…]

இவ்வார ஜும்ஆக்களின் விபரம் (05.07.2013)

காத்தான்குடி 01, மீரா பெரிய ஜும்ஆப்பள்ளி வாயல்

குத்பா உரை: மௌலவி AM. அலியார் (ரியாதி) MA

புதிய காத்தான்குடி 06, நூராணியா ஜும்ஆப்பள்ளி வாயல்

குத்பா உரை: மௌலவி ALM. பாயிஸ் (ஹுமைதி)

[Read more…]

இவ்வார ஜும்ஆக்களின் விபரம் (28.06.2013) Updated

Jumma

ஏறாவூர் தௌஹீத் ஜும்ஆ பள்ளிவாயல்

குத்பா உரை: மௌலவி AM. அப்துல் ஹனி (ஹாமி)

தலைப்பு: நன்மையின் பால் விரைந்து செல்வோம்

காத்தான்குடி 03, முஹைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப்பள்ளிவாயல்

குத்பா உரை: மௌலவி MHM. ராஃபி (புர்கானி) விரிவுரையாளர்-  புர்கானியா அரபுக்கல்லூரி கட்டுகல்ல.

[Read more…]

ஜாமிஉத் தௌஹீத் பள்ளிவாயல்-குத்பா பிரசங்க ஒலிப்பதிவு (14.06.2013)

friday-jummahஒலிப்பதிவு: இஸ்லாமிக் சென்டர் ஊடகப்பிரிவு

காலத்திற்கு பொருத்தமான தலைப்பில் அமைந்த இந்த குத்பா பிரசங்கத்தின் ஒலிப்பதிவினை எமது வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்கின்றோம்.

இடம்: காத்தான்குடி 06, ஜாமிஉத் தௌஹீத் (சென்டர்) பள்ளிவாயல்

குத்பா  உரை: மௌலவி AL. முஸ்தபா (ஸலாமி)

தலைப்பு: “ஊடகமும் முஸ்லிம்களும்”

[Read more…]

மீரா பெரிய ஜும்ஆப்பள்ளி வாயல் – குத்பா பிரசங்க ஒலிப்பதிவு

friday-jummahஒலிப்பதிவு: AM. சாதிகீன்

இடம்: காத்தான்குடி 01, மீரா பெரிய ஜும்ஆப்பள்ளி வாயல்

குத்பா உரை: மௌலவி MSM. அப்துல் காதர் (ஹாபிஸ், பலாஹி)

ஒலிப்பதிவினைக் கேட்க கீழேயுள்ள அம்புக்குறியினை கிளிக் செய்யவும்

[Read more…]

ஷஃபான் மாதத்தில் செய்ய வேண்டியவைகளும், செய்யக் கூடாதவைகளும்

Ashar Seelaniதலைப்பு: சுன்னாவுக்கும் பித்ஆவுக்கும் மத்தியில் ஷாபான்

வழங்குபவர்: அஸ்ஹர் ஸீலானி

வீடியோ & எடிட்டிங்: அல்தாப்ஃ பாஃருக்

தயாரிப்பு: அல்கொபார் அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம்

[Read more…]

இவ்வார ஜும்ஆக்களின் விபரம் (14.06.2013)

காத்தான்குடி 01, மீரா பெரிய ஜும்ஆப்பள்ளி வாயல்

குத்பா உரை: மௌலவி AM. அலியார் (ரியாதி) MA

புதிய காத்தான்குடி 01, பதுரியா  ஜும்ஆப்பள்ளி வாயல்

குத்பா உரை: மௌலவி MIM. முஸ்தகீம் (பலாஹி)

[Read more…]

ஜமாஅத்தே இஸ்லாமியின் இஜ்திமா உரையின் ஒலிப்பதிவு

Bayaanஒலிப்பதிவு: AM. சாதிகீன்

பாலமுனை முஹைதீன் ஜும்ஆப்பள்ளி வாயலில் இடம்பெற்ற ஜமாஅத்தே இஸ்லாமியின்- பிராந்திய இஜ்திமாவில் இடம்பெற்ற “மனித சமூகத்தின் ஆக்கமும் அழிவும்” என்ற பயான் காலத்திற்குப் பொருத்தமான மிகவும் அறிவுபூர்வமான கருத்துக்களை உள்ளடக்கிய அந்த பயானை எமது வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்படுகிறது.

உரை: அஷ்-ஷெய்க் MHM. உஸைர் (இஸ்லாஹி)

[Read more…]

பாலமுனை, மீரா ஜும்ஆப்பள்ளி வாயல்- குத்பா பிரசங்க ஒலிப்பதிவு

ஒலிப்பதிவு: AM. சாதிகீன்

இடம்: பாலமுனை, நடுவோடை மீரா ஜும்ஆப்பள்ளி வாயல்

குத்பா உரை: அஷ்-ஷெய்க் MSM. உவைஸ் (இஸ்லாஹி)

தலைப்பு: அல்லாஹ்வால் தோற்றுவிக்கப்பட்ட சிறந்த சமூகம்.

ஒலிப்பதிவினைக் கேட்க கீழேயுள்ள அம்புக்குரியினை கிளிக் செய்யவும்

இவ்வார ஜும்ஆக்களின் விபரம் (07.06.2013)

Jummaகாத்தான்குடி 03, முஹைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப்பள்ளி வாயல்

குத்பா உரை: மௌலவி MAM. மஸூத் அஹ்மத் (காஸிமி)

புதிய காத்தான்குடி 06, நூராணியா ஜும்ஆப்பள்ளி வாயல்

குத்பா உரை: மௌலவி MIM. ஜவாஹிர் (பலாஹி) BA

மட்டக்களப்பு, ஜாமிஉஸ் ஸலாம் ஜும்ஆப்பள்ளி வாயல்

[Read more…]

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன வருடாந்த பொதுச்சபைக் கூட்ட, விஷேட உரை

ஒலிப்பதிவு: AM. சாதிகீன்

இடம்: காத்தான்குடி 03, முஹைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப்பள்ளி வாயல்

உரை: மௌலவி MCM. றிஸ்வான் (மதனி) BA

தலைப்பு: தலைமைத்துவம், சபை ஒழுங்குகள் தொடர்பான விஷேட பயான்

ஒலிப்பதிவினைக் கேட்க கீழேயுள்ள அம்புக்குரியினை கிளிக் செய்யவும்

ஜாமிஉல் லாபிரின்- ஜும்ஆவின் ஒலிப்பதிவு

ஒலிப்பதிவு: AM. சாதிகீன்

இடம்: காத்தான்குடி 05, ஜாமிஉல் லாபிரின் பெரிய ஜும்ஆப்பள்ளி வாயல்

குத்பா உரை: மௌலவி MI. அப்துல் கபூர் (மதனி) BA 

தலைப்பு: “பசாத்”- குழப்பம் விளைவித்தல் என்பதன் பரந்த விளக்கம்.

ஒலிப்பதிவினைக் கேட்க கீழேயுள்ள அம்புக்குரியினை கிளிக் செய்யவும்

இவ்வார ஜும்ஆக்களின் விபரம் (31.05.2013)

friday-jummahகாத்தான்குடி 05, ஜாமிஉல் லாபிரின் பெரிய ஜும்ஆப்பள்ளி வாயல்

குத்பா உரை: மௌலவி MI. அப்துல் கபூர் (மதனி) BA

புதிய காத்தான்குடி 01, பதுரியா ஜும்ஆப்பள்ளி வாயல்

குத்பா உரை: மௌலவி MM. றிஸ்வி (முப்தி)

[Read more…]

மீரா பெரிய ஜும்ஆப்பள்ளி வாயல்-குத்பா பிரசங்க ஒலிப்பதிவு

ஒலிப்பதிவு AM. சாதிகீன்

இடம்: காத்தான்குடி 01, மீரா பெரிய ஜும்ஆப்பள்ளி வாயல்

குத்பா உரை: மௌலவி ALM. சஜீத் அலி (முப்தி) – மர்க்கஸ்

ஒலிப்பதிவினைக் கேட்க கீழேயுள்ள அம்புக்குரியினை கிளிக் செய்யவும்.

இவ்வார ஜும்ஆக்களின் விபரம் (24.05.2013)

Jummaகாத்தான்குடி 01, மீரா பெரிய ஜும்ஆப்பள்ளி வாயல்

குத்பா உரை: மௌலவி ALM. சஜீத் அலி (முப்தி) – மர்க்கஸ்

புதிய காத்தான்குடி 06, நூராணியா ஜும்ஆப்பள்ளி வாயல்

குத்பா உரை: மௌலவி MI. அப்துல் ஜப்பார் (பஹ்ஜி) – கொழும்பு

மட்டக்களப்பு, ஜாமிஉஸ் ஸலாம் ஜும்ஆப்பள்ளி வாயல்

[Read more…]

இயேசு ஒரு முஸ்லிம் – பாகம் IV

writeமுஹம்மட் அர்ஷாத் – காத்தான்குடி

கடந்த தொடர்களில் இயேசு (அலை) அவர்கள் ஒரு முஸ்லிம் என்பதை நிரூபித்து நிற்கும் ஓரிறைக் கொள்கையை ஆணித்தரமாக எடுத்துரைக்கும் பைபிள் வசனங்கள்,  கொலை, விபச்சாரம், களவு, பொய்ச்சாட்சி, பெற்றோரை துன்புறுத்தல், ஜீவகாருண்யமின்மை போன்ற கொடிய பாவங்களிலிருந்து தவிர்ந்து வாழ்ந்தாலே ஒருவர் நித்திய ஜீவனை அடையமுடியும்- நியாயத் தீர்ப்பு நாளில் வெற்றியடைய முடியும் என்பதற்கான சான்றுகளை கடந்த தொடர்களில் நோக்கினோம்.

அதன் தொடரில் வன்கொடுமையான வட்டி குறித்து திருமறைக் குர்ஆனும், பைபிளும் என்ன சொல்கின்றது என நோக்குவோம்.

[Read more…]

CIG- வாராந்த பயான் ஒலிப்பதிவு (11.05.2013)

CIG Logoஒலிப்பதிவு AM. சாதிகீன்

இடம்: இஸ்லாமிய வழிகாட்டல் நிலைய பள்ளிவாயல்

உரை: அஷ்-ஷெய்க் NG. அப்துல் கமால் (இஸ்லாஹி) 

தலைப்பு: பதட்டமும் அதிலிருந்து விலகிக் கொள்வதற்கான வழிகாட்டல்களும் (உளவியல் சார்ந்த வழிகாட்டல்) 

[Read more…]

குத்பா பிரசங்க ஒலிப்பதிவு – ஜாமிஉல் லாபிரின் ஜும்ஆப்பள்ளி வாயல்

friday-jummahஒலிப்பதிவு: AM. சாதிகீன்

இடம்: காத்தான்குடி 05, ஜாமிஉல் லாபிரின் பெரிய ஜும்ஆப்பள்ளி வாயல்

குத்பா உரை: மௌலவி MA. ஹாலித் ஹசன் (பலாஹி)

தலைப்பு: திருமணம் பேசியுள்ள பெண்ணோடு பேசி உறவாடலாமா?

[Read more…]

ஜும்ஆ ஒலிப்பதிவு: மீரா பெரிய ஜும்ஆ பள்ளிவாயல்

friday-jummahஒலிப்பதிவு AM. சாதிகீன்

இடம்: காத்தான்குடி 01, மீரா பெரிய ஜும்ஆ பள்ளிவாயல்

குத்பா உரை: மௌலவி MIM. ஜவாஹிர் (பலாஹி) BA 

தலைப்பு: இஸ்லாத்தின் பார்வையில் விலையேற்றமும் அதற்கான காரணிகளும்.

[Read more…]

ஒழுக்கத்துறை வீழ்ச்சியே முஸ்லிம்களின் பலவீனத்திற்குக்காரணம்

IMG_0007– எம்.ரீ.எம்.பாரிஸ்  –

காத்தான்குடியில்  இஸ்லாமிக் சென்டரில் இடம் பெற்ற இஸ்லாமிய மாநாட்டில் ஓட்டமாவடி பிரதேச செயலகத்திக் காலசார உத்தியோகத்தர் மௌலவி அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முஹம்மத் (காஸிமி ) எம்.ஏ அவர்கள் ஆற்றிய உரையின் தொகுப்பு

இஸ்லாம் பண்பாட்டு ஒழுக்கத்தின் மார்க்கம்
இஸ்லாம் அறிவை ஆயுதமாக கொண்டு கட்டியொழுப்பபட்ட மார்க்கமாயினும், அதன் போதனைகள் அனைத்தினதும் அடிப்படையான நோக்கம் நல்லொழுக்கமும், சிறந்த பண்பாடும் நிறைந்த சமூகம் ஒன்றை கட்டியொழுப்புவதாகும். [Read more…]

எது கலாச்சராம்?

Ashar Seelaniவழங்குபவர்: அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர், அல்-கோபார் தாஃவா நிலையம்

தலைப்பு: எது கலாச்சராம்?

வீடியோ & எடிட்டிங்: அல்தாப்ஃ பாஃருக்

தயாரிப்பு: அல் அஹ்ஸா அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம்

[Read more…]

ஜாமிஉல் லாபிரின் பள்ளிவாயலில் இடம்பெற்ற குத்பா பிரசங்கத்தின் ஒலிப்பதிவு

friday-jummahஒலிப்பதிவு AM. சாதிகீன்

இடம்: காத்தான்குடி 05, ஜாமிஉல் லாபிரின் பெரிய ஜும்ஆப்பள்ளி வாயல்

குத்பா உரை: மௌலவி AGM. அமீன் (பலாஹி)

ஒலிப்பதிவினைக் கேட்க கீழேயுள்ள அம்புக்குரியினை கிளிக் செய்யவும்.

[Read more…]

இவ்வார ஜும்ஆக்களின் விபரம் (19.04.2013)

Friday-Jummahகாத்தான்குடி 05, ஜாமிஉல் லாபிரின் பெரிய ஜும்ஆப்பள்ளி வாயல்

குத்பா உரை: மௌலவி AGM. அமீன் (பலாஹி)

புதிய காத்தான்குடி 01, பதுரியா ஜும்ஆப்பள்ளி வாயல்

குத்பா உரை: மௌலவி MMM. பாஹிம் (பலாஹி)

மட்டக்களப்பு, ஜாமிஉஸ் ஸலாம் ஜும்ஆப்பள்ளி வாயல்

[Read more…]

மீரா ஜும்ஆப்பள்ளி வாயலில் இடம்பெற்ற குத்பா பிரசங்கத்தின் ஒலிப்பதிவு

friday-jummahஒலிப்பதிவு: AM. சாதிகீன்

இடம்: காத்தான்குடி 01, மீரா பெரிய ஜும்ஆப்பள்ளி வாயல்

குத்பா உரை: மௌலவி MBM. பாஹிம் (பலாஹி)

தலைப்பு: இன்றைய சூழலில் சிறுபான்மை முஸ்லிம்களாகிய நாம் கடைப்பிடிக்க வேண்டிய சில விடயங்கள்.

[Read more…]

இவ்வார ஜும்ஆக்களின் விபரம் (12.04.2013)

காத்தான்குடி 01, மீரா பெரிய ஜும்ஆப்பள்ளி வாயல்friday-jummah

குத்பா உரை: மௌலவி MBM. பாஹிம் (பலாஹி)

புதிய காத்தான்குடி 06, நூராணியா ஜும்ஆப்பள்ளி வாயல்

குத்பா உரை: மௌலவி MHM. வலீத் (பலாஹி) [Read more…]

குலபாஉர் ராஷிதீன் குர்ஆன் மத்ரஸாவின் வருடாந்த பரிசளிப்பு விழா

DSCF5036தகவல்: – எம்.எச் எம் அன்வர் –

மஸ்ஜிதுல் குலபாஉர் ராஷிதீன் குர்ஆன் மத்ரஸாவின் வருடாந்த பரிசளிப்பு விழா வெள்ளிக்கிழமை தலைவர் ஏ எல் பதுர்தீன் தலைமையில் இடம்பெற்றது காத்தான்குடி குர்ஆன் மத்ரஸாக்கள் அபிவிருத்தி சபையினால் 2012 ம் ஆண்டு நடாத்தப்பட்ட போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்த 09 மாணவ மாணவிகள் இதன்போது சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். [Read more…]

விஷேட பயான் நிகழ்ச்சி – சவூதி தமாம் நகர்

MOULAVI MUJAHID IDGC SPECIAL PROGRAM 08.04.2013