கிழக்கில் தமிழர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் இணக்க அரசியலை ஏற்படுத்தியது நாங்களே-பூ.பிரசாந்தன்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

கிழக்கு மாகாணத்தில் இணக்க அரசியலை சிறப்பாக மேற்கொண்டு தமிழ் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து காட்டிய பெருமை எம்மையே சாரும். எதிர்ப்பு அசியலே தமிழர்களின் பாதை என்பதனை மாற்றி சுய கௌரவத்துடன் இணக்க அரசியலும் செய்யலாம். அதன் மூலம் தமிழர்களின் அடிப்படைத் தேவைகளான நிதி நிருவாக சமத்துவத்தினை பேணிப்பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதனை ஏனைய அரசியல் தலைமைகளுக்கும் தமிழ் மக்களுக்கும் எடுத்துக்காட்டியது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினையே சாரும் என கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும்இ தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளமான பூ.பிரசாந்தன் குறிப்பிட்டார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கிராம மட்ட அமைப்பாளர்களுடனான 2015ம் வருடத்திற்கான கட்சியினின் செயற்திட்ட தொடர்பான கலந்துரையாடலில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 2008ல் கிழக்கு

DSC_0007

மாகாணசபையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பொறுப்பேற்று இணக்க அரசியல் மேற்கொள்ள முற்பட்டபோது பலர் தூற்றமுற்பட்டார்கள். எமக்கான பாதை இதுவல்ல துரோகத்தனமான பொம்மை மாகாணசபையினை பொறுப்பேற்கின்றார்கள் என்ன செய்யப் போகின்றார்கள் என்றெல்லாம் பல அவதூறுகள் எம் மீது வீசப்பட்ட போது மிக நிதானமாக முடிவெடுத்த த.ம.வி.பு கட்சியும் அதன் தலைவர் சி.சந்திரகாந்தனும் நான்கு வருடங்கள் கிழக்கு மாகாணத்தின் மக்களின் சமத்துவமான இன ஐக்கியத்துடன் எவ்வாறு மாகாணத்தினை நெறிப்படுத்திக் காட்டினார் என்றால் அதற்கு மக்களே சாட்சி கூறுவார்கள்.

அதற்கு பின்னரே கிழக்கு தமிழர்கள் சுய கௌரவத்துடனான இணக்க அரசியலினை ஆரம்பித்தார்கள். நாம் அந்த வகையில் திருப்தி அடைகின்றோம் காலம் காலமாக எதிர்ப்பு அரசியல் செய்த தமிழ் தலைவர்களும் இணக்க அரசியலின் தேவையினை உணர்ந்து இருக்கின்றார்கள். அதன் வெளிப்பாடே வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் கூற்றும்இ கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் கோரியதும் பின்பு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சர் தர மறுத்ததை தொடர்ந்து ஏதாவது இரு அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்க இணக்கம் தெரிவித்து அதற்கான முஸ்தீபுகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்டு வருவதும் எமது த.ம.வி.பு கட்சி 2008ல் எடுத்த தீர்க்கதரிசனமான அரசியல் பாதை வெற்றியடைந்துள்ளதினை புலப்படுத்தி நிற்கின்றது.

நாம் அன்று எடுத்த முடிவு இன்று மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுவதற்கு காரணமாக அமைந்துள்ளது. எதிர்ப்பு அரசியலையே தேர்ச்சி பெற்றிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்புபிற்கும் அதில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இன்று கிழக்கு மாகாணசபையில் எந்த அமைச்சை எடுக்கலாம் எவ்வாறு ஏனைய ஆளும் கட்சிகளுடன் இணைந்து இணக்க அரசியலை மேற்கொள்ளலாம் என கூட்டங்கள் தீர்மானிக்கும் அளவிற்கு நிலைமை முன்னேறியுள்ளது. வரவேற்கக் கூடியதுதான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் காட்டிய வழியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமைகள் பயனளிப்பதன் மூலம் பல எதிர்ப்புடன் இருக்கும் மக்களுக்கு தேவைகள் பூர்த்தி செய்யப்படுமானால் நாம் அதனை வரவேற்போம் எந்தக் கட்சியானலும் சரி எந்தத் தலைமையானாலும் சரி எம் கிழக்கு மாகாணத் தமிழ் சமுகத்தின் உணர்வுகளை மதிப்பதுடன் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பாடுபடும் பட்சத்தில் நாம் பெருமனதுடன் வழிவிட்டுக் கொடுக்க எப்போதும் தயக்கம் காட்டப் போவதில்லை எமது சமுகம் யாரிடமும் மண்டியிடாத நிருவாக அரசியல் அதிகாரத்துடன் இன ஐக்கியத்துடன் வாழ்வதனை உறுதிப்படுத்துவதே இன்றைய தேவை எனவும் குறிப்பிட்டார்.

20.02.2015ம் திகதி கட்சியின் தலைவர் காரியாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

Leave a comment